கண்ணாடி அணியாமல் எளிய கண் விழிப்பயிற்சி மூலம் கண்பார்வை குறைபாட்டை
போக்கும் பயிற்சியை புதுச்சேரியில் இயங்கிவரும் அரவிந்தர் ஆசிரம பயிற்சி
மையம் மக்களுக்கு இலவசமாக கற்றுத்தருகிறது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அரவிந்தர் ஆசிரம கட்டுபாட்டில், இந்த கண்பார்வை குறைபாட்டை சரி செய்யும் பயிற்சிப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 7 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்சிமிட்டுதல் போன்ற பார்வை குறைபாடுகளை மருந்து மாத்திரைகள் இன்றி எளிய கண்விழிப்பயிற்சி மூலம் எந்தவித கட்டணமின்றி இலவசமாக சரிசெய்கிறோம் என்கின்றனர் இந்த பயிற்சி பள்ளி நிர்வாகிகள்.
இந்த பயிற்சி மையத்திற்கு வரும் பார்வை திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இங்கு 6 நாட்கள் தொடர்ச்சியாக காலை மற்றும் மாலை, 2 மணி நேரம் முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது, சூரிய ஒளியில் கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்துதல் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்துதல் என பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆறு நாட்கள் பயிற்சி முடித்த பின் இறுதி நாளில் பார்வை திறன் பரிசோதிக்கப்படுகிறது, அந்த பரிசோதனை முடிவில் தாங்கள் இந்த மையத்திற்கு வருவதற்கு முன்பும் இருந்த பார்வை திறனைவிட கூடுதலாக பார்வைத்திறன் பெற்றதாகக் கூறுகின்றனர் இங்கு வந்து பயிற்சி பெற்றவர்கள். பெரும்பாலும் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமானோர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
நாட்டில் ஒரு சில இடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டாலும் இந்த மையத்தில் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற விரும்புவோர் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக தங்கியிருந்து பயிற்சி எடுக்க வேண்டும். ஆசிரமத்தில் நபர் ஒருவருக்கு தலா 100 ருபாய் செலுத்தினால் தங்கும் விடுதி அளிக்கபடுகிறது. auroeyesight@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அரவிந்தர் ஆசிரம கட்டுபாட்டில், இந்த கண்பார்வை குறைபாட்டை சரி செய்யும் பயிற்சிப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 7 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்சிமிட்டுதல் போன்ற பார்வை குறைபாடுகளை மருந்து மாத்திரைகள் இன்றி எளிய கண்விழிப்பயிற்சி மூலம் எந்தவித கட்டணமின்றி இலவசமாக சரிசெய்கிறோம் என்கின்றனர் இந்த பயிற்சி பள்ளி நிர்வாகிகள்.
இந்த பயிற்சி மையத்திற்கு வரும் பார்வை திறன் குறைவாக உள்ளவர்களுக்கு இங்கு 6 நாட்கள் தொடர்ச்சியாக காலை மற்றும் மாலை, 2 மணி நேரம் முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது, சூரிய ஒளியில் கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்துதல் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்துதல் என பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆறு நாட்கள் பயிற்சி முடித்த பின் இறுதி நாளில் பார்வை திறன் பரிசோதிக்கப்படுகிறது, அந்த பரிசோதனை முடிவில் தாங்கள் இந்த மையத்திற்கு வருவதற்கு முன்பும் இருந்த பார்வை திறனைவிட கூடுதலாக பார்வைத்திறன் பெற்றதாகக் கூறுகின்றனர் இங்கு வந்து பயிற்சி பெற்றவர்கள். பெரும்பாலும் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமானோர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
நாட்டில் ஒரு சில இடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டாலும் இந்த மையத்தில் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற விரும்புவோர் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக தங்கியிருந்து பயிற்சி எடுக்க வேண்டும். ஆசிரமத்தில் நபர் ஒருவருக்கு தலா 100 ருபாய் செலுத்தினால் தங்கும் விடுதி அளிக்கபடுகிறது. auroeyesight@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.