Pages

திருநீர் அணிவது எதற்காக என்பது தெரியுமா ?

குளியலைப் போலவே திருநீர் அணிவதும் அன்றாட வாழ்கையின் ஓர் முக்கிய பாகமாய் இருந்தது முற்காலத்தில்.

உடல் முழுதும் திருநீர் பூச வேண்டுமா ?
திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுதும் திருநீர் பூச வேண்டும் என்று சொன்னால், இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும்.
தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க்கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர்.
பின் கழுத்தில் திருநீர் பூசுவது மிக  அவசியம் ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது.
காதுகளும் மிக முக்கியமான இடம். உடம்பின் 72,000 நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம் பாதிப்புண்டாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.
உடலில் எந்த இடத்தில விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அவ்வாறு திருநீர் அணிந்தால் நவீன உலகமும் அங்கீகரித்த உடல் மருத்துவத்தை நாம் அடைகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.

தயாரிக்கும் முறை :
புல் மட்டும் அருந்தும் பசுவின் சுத்தமான எருவை, சிவராத்திரி அன்று உமியில் எரிப்பர். அதில் கிடைக்கும் சாம்பலை, தண்ணீரில் கலக்கி மறுபடியும் உலர வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் நெற்றியில் இடுவதற்காக பாதுகாத்து வைக்கவேண்டும். இதுவே  சுத்தமான திருநீர் தயாரிக்கும் முறை.
அணியும் முறை :
திருநீரை நனைத்தும் நனைக்காமலும் அணிவதுண்டு. திருநீர் அணிந்தால் உடலின் துர் நீரை உறிஞ்சி எடுப்பதற்கும், உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உடல்நிலையை மேன்மையடையச் செய்வதற்கும் வாய்ப்புண்டு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
திருநீரை நனைத்து அணிவதன் மூலம் உடல் வெப்பம் குறைவதனால் ஜுரம் பாதித்தவர்களின் நெற்றியில் நனைந்த திருநீர் பூசினால் ஜுரம் இறங்குவதை காணலாம்.
திரு விபூதி :
மூலிகைச் செடிகளை சுத்தமான நெய்யில் ஹோமகுண்டத்தில் வேக வைத்த பின் எஞ்சி இருப்பதை திருவிபூதி என அழைப்பதுண்டு.
 

உடல் முழுதும் திருநீர் பூச வேண்டுமா ?

திருநீர் பூசுவதையே மூட நம்பிக்கையாகக் கருதும் இக்காலத்தில், உடல் முழுதும் திருநீர் பூச வேண்டும் என்று சொன்னால், இறைவனருள் இதனால் கிடைக்கப் பெறும் என்ற நம்பிக்கை இருந்தாலும் உடலெங்கும் விபூதி அணிவதால் மற்றுமொரு நன்மை உண்டாகும்.
தலை உச்சியில் திருநீர் பூசினால் அங்குள்ள நீர்க்கெட்டை இழுத்தெடுக்கும் என்பது பலரும் கண்டறிந்துள்ளனர்.
பின் கழுத்தில் திருநீர் பூசுவது மிக  அவசியம் ஏனென்றால் நீரை உறிஞ்சி எடுக்கும் வாய்ப்பு மிக அதிகம் உள்ள இடம் அது.
காதுகளும் மிக முக்கியமான இடம். உடம்பின் 72,000 நரம்புகளும் ஒன்று சேரும் வர்மமாகும் காதுகள் ஒவ்வொரு நரம்புகளிலும் நீரும் கொழுப்பும் கட்டுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. இதனால் வாதம் பாதிப்புண்டாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.
உடலில் எந்த இடத்தில விபூதி அணிந்தாலும் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அவ்வாறு திருநீர் அணிந்தால் நவீன உலகமும் அங்கீகரித்த உடல் மருத்துவத்தை நாம் அடைகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை.
 
 

No comments:

Post a Comment